நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் இருப்பவர்களிடம் வரி வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் வரி பாக்கியை வசூலிக்க தனிக்குழு அமைத்து வீடு மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று வரி குறித்த விபரத்தை தெரிவித்து வரி செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் வரி நிலுவை அதிகம் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து வரி வசூல் செய்து வருகின்றன.
இந்நிலையில் உதகை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி உதகை நகராட்சிக்கு ரூபாய் 27,33,892 வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர் – சுகாதார ஆய்வாளர் – நகராட்சி மேற்பார்வையாளர்கள் தனியார் தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.