ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேளாண்மை திட்டம் – IFHRMS

புதிதாக உருவாக்கப்படும் இந்த திட்டத்தினால் பட்டியல்கள் சமர்;பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் தீர்வு செய்ய இயலும். இத்திட்டத்தினால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூலத்திற்கும் மாதாந்திர கிணக்கின்போது நடைபெறும் ஒத்திசைவுப் பணி இனி வருங்காலங்களில் தவிர்க்கப்படும்.
புதியதாக அறிமுகப்படுத்தப்படும் நேரடி இணையவழிபட்டியல் சமர்ப்பிக்கப்படும் முறை மூலம் கருவூலத்துறையில் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்பட்டு அதற்கான சேவைகள் குறைக்கப்படுவதுடன் பணியாளர்களின் பணிச்சுமை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. கணினி வழி பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படுவதால் மனிதவள பயன்பாட்டால் நிகழும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
அனைத்து பணியாளர்களும் தங்களது பணியாளர்களும் தங்களது பணிப்பதிவேட்டை எளிதாக பார்க்க இயலாத நிலையிலிருந்து பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் கைபேசி செயலியிலும் தங்களது கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள இயலும். மேலும் இத்திட்டத்தில் பணியாளரின் கணிப்பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையை பயன்படுத்தி கணினி வழியிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரிசெய்து கொள்ள முடியும். ஓர் அரசுப் பணியாளர் அவரது சம்பள பிடித்தங்கள் கடன் மற்றும் முன்பணங்கள் விடுப்புத்தொடர்பாக விவரப் பதிவுகளை அறிய இயலும். மேலும் விடுப்பினை இணைய வழி கோரிக்கையாக விடுக்க இயலும்